



வரலாறு
அருள்மிகு தரவைச் சித்தி விநாயகர் ஆலயம்
தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் மறைந்து போன வரலாற்று உண்மைகள்
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை மாநகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ தரவைப் பிள்ளையார் ஆலயம் என்பது கலாசார சமூக விழுமியங்களை பேணுவதிலும் சைவநெறி சார்ந்த பாரம்பரிய கலாச்சார சமூக வாழ்விலும் சமய அனுஸ்டானங்களில் காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றது.
மட்டக்களப்பு – பொத்துவில் பிரதான வீதியில் மட்டக்களப்பு மாநகரத்துக்கு தெற்கே 41 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
கல்முனை மாநகரில் தமிழர் செறிந்து வாழும் பிரதேசத்தின் தென்பகுதியில் தரவைச் சித்தி விநாயகர் ஆலயம் எழுச்சியோடு காட்சியளிக்கிறது. ஆலயத்தின் கிழக்கே ஒரு கிலோ மீ
தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் மறைந்து போன வரலாற்று உண்மைகள்
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை மாநகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ தரவைப் பிள்ளையார் ஆலயம் என்பது கலாசார சமூக விழுமியங்களை பேணுவதிலும் சைவநெறி சார்ந்த பாரம்பரிய கலாச்சார சமூக வாழ்விலும் சமயனுஸ்டானங்களில் காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றது.
வரலாறு
அருள்மிகு கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம்
இந்து சமயம் பல வழிபாட்டு முறைகளைக் தன்னகத்தே கொண்டது.இவ் வழிபாட்டு முறைகள் எல்லாம் மனிதனின் படிமுறை வளர்ச்சியால் காலத்திற்கு காலம் தோற்றம் பெற்றவை.இவற்றில் ஒரு பகுதி வழிபாட்டு முறைதான் பெண் தெய்வ வழிபாடாகும்.குறிப்பாக கிழக்கிலங்கை மக்களிடையே வழக்கில் உள்ள சைவம் பழைய மரபைச் சார்ந்தது.இவர்கள் கடைப்பிடிக்கும் சடங்கு முறையான வணக்கம் மிகப் பழமையானது.ஆலயங்கள் தோன்றும் முன்னரே சடங்கு முறையான வழிபாடு தமிழர்களிடையே தோன்றிவிட்டது.
காலப்போக்கில் ஆலயங்கள் ஆகம முறைப்படி நிரந்தரமாக அமையப் பெற்றாலும் கூட தற்போதும் சடங்கு முறைகளே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு காலம் காலமாக வணங்கப்பட்டு வரும் காளி, துர்க்கை,மாரி,பேச்சி முதலிய பெண் தெய்வ வரிசையில் இறுதியாக வந்து சேர்ந்த தெய்வம் கண்ணகியாகும்.கண்ணகி தமிழர்களிடையே ஒரு புதுத் தெய்வமாக உருப்பெற்ற கதையை ‘சிலப்பதிகாரம்’ நயம்படக் கூறுகின்றது.

எங்கள் சேவைகள்
பாலுக்குள் இருக்கும் நெய் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. தயிராக்கி கடைந்தால் தான் புலப்படுகிறது. அதுபோல, பக்தி செய்தால் தான் இறைவனைக் காண முடியும்

தரவைச் சித்தி விநாயகர் ஆலய பூசை விபரங்கள்

விசேட பூசைகள்

திதி மற்றும் ஏனைய சடங்குகள்

பொது நிகழ்வுகள்

ஆலய நிர்வாக உப அமைப்புகளும், பணிகளும்

ஆலய நிருவாக அறிவித்தல்கள்
நேரலை மற்றும் காணொளி
ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க போவது எதுவுமில்லை. அதனால் நாம் பெறும் இன்பம் இரண்டு மடங்காகும்.

எங்கள் சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை ஆராயுங்கள்
தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல், உயர்ந்த குணத்தை கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.
வருடாந்த வைகாசி திருகுளிர்த்தி 2025
- நேரம் :
- இடம் : கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் கோவில்
கல்முனை மாநகர் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் வருடாந்த மகோத்சவத் திருவிழா
- நேரம் :
- இடம் :
அருள்மிகு ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ திருமுகம் – 2025
- நேரம் :
- இடம் : அருள்மிகு தரவைச் சித்தி விநாயகர் ஆலயம்
நிர்வாக உறுப்பினர்கள்
நம்முடைய தலைவன், மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் நாம் செய்யும் குற்றங்கள் அனைத்தையும் அறிகிறான். ஆகவே, கடவுளிடத்தில் ஒவ்வொருவருக்கும் அச்சம் இருக்க வேண்டும்.
க. காராளசிங்கம்
உறுப்பினர்
சிவஸ்ரீ க. வி.பிரமீன் சர்மா
உறுப்பினர்
கி. தேவகிருஷ்ணா
உறுப்பினர்
தி. திலீபன்
உறுப்பினர்
க. பிரசாந்தன்
உறுப்பினர்
யோகச்சந்திரன்
உறுப்பினர்
... See MoreSee Less
6 CommentsComment on Facebook
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
View more comments
இன்று திருக்கதவு திறத்தலுடன்* உற்சவம் ஆரம்பம்
கல்முனை கடற்கரை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் இன்று ( 02 / 06 / 2025 ) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிறது.
இன்று மாலை ஆறு முப்பது அளவில் அம்மனின் திருக்கதவு திறக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகும்.
இதற்கு முன்னதாக, கல்முனை ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்மனின் பூஜை பொருட்கள் அடங்கிய பேளை - கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சம்பிரதாய நிகழ்வும் உணர்வுபூர்வமாக நடைபெறும்.
தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் பிரதம பூசகர் கிருபைராஜா ஐயா தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம் பெறும்.
தினமும் கூட்டுப் பிரார்த்தனைகள், ஆன்மீக சிறப்பு சொற்பொழிவுகள், கல்முனை- 3, அறநெறி மாணவர்களின் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
www.kalmunainet.com/archives/106783
கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி 2025 ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை ( 02/06 /2025) ஆரம்பம்🙏🙏 ... See MoreSee Less
1 CommentComment on Facebook
❤️🙏
ஆலய சிரமதான பணியில் நம்மவர்கள்.
உங்களின் பற்றுதியான அர்ப்பணிப்புக்கு ஆலய நிர்வாக சபையின் சிரம்தாழ்ந்த நன்றிகள்.
🙏👍 ... See MoreSee Less
1 CommentComment on Facebook
Good work..
இன்னும் மூன்றே நாட்கள்...
நன்கொடைகளை வாரி வழங்குங்கள்
கண்கொள்ளாக் காட்சி : வர்ண மின்னொளியில் ஆலயம்
நம்முடைய கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி உற்சவம் ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று தினங்கள் மாத்திரமே இருக்கின்றன.
ஆலய திருப்பணிகளிலே இளைஞர்களும் மகளிர் மன்றத்தினரும் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் கோயில் வீதி, *வர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு - கண்கொள்ளாக் காட்சியாக காண முடிகின்றது.
ஊன்- உறக்கமின்றி
இரவும் பகலும் இதற்காக உழைக்கின்ற இளைஞர்களுக்கு சிரம் தாழ்ந்த பாராட்டுகளும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் உரித்தாகட்டும்.
அன்பார்ந்த கண்ணகைத் தாயின் அடியார்களே....!
பொருளாகவோ நிதியாகவோ கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு வாரி வழங்குங்கள். ஆலய திருப்பணிகள் நிறைய இருக்கின்றன. அம்மனின் ஆசி பெற்ற உங்களின் உதவியோடு உற்சவத்தை திறம்பட நடத்த முடியுமென ஆலய பரிபாலன சபை நம்பிக்கை கொண்டுள்ளது.
எனவே, உலகெங்கும் பரந்து வாழும் அன்பார்ந்த நம் உறவுகளே...!
வருடாந்த உற்சவத்தை ஒட்டிய திருப்பணிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளை மனம் கோணாது வாரி வழங்கி, நம் குலதெய்வத்தின் அருளாசியை பெற்றேகுங்கள். ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
வருடாந்த வைகாசி திருகுளிர்த்தி 2025 ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
கல்முனை மாநகர் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் வருடாந்த மகோத்சவத் திருவிழா
சிவனடியார்களால் வியந்து பாடப்பட்டதும், சித்தர்களால் சிவ பூமி என்று போற்றப்பட்டதும், ரிஷிகளின் பாதம் பட்ட புண்ணிய பூமி என போற்றப்படும் - கல்முனை மாநகர் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோத்சவத் திருவிழா கடந்த முதலாம் திகதி ( 01/04/2025) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 12 நாட்கள் சிறப்புறும் இந்த திருவிழா - எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.
பிரதம குரு , இருக்கு வேத உபாசகர் - வாமதேவ சிவச்சாரியார் சிவ ஸ்ரீ குகணேஷக் குருக்கள் ( யாழ்ப்பாணம் பெரியவிளான் பிள்ளையார் ஆலயம் ) தலைமையில் நடைபெறும் உற்சவ திருவிழா 12 நாட்கள் சிறப்பாக இடம் பெற்று வருகிறது.
மாம்பழத் திருவிழா, திருவிளக்கு பூஜை, பக்தி முக்தி திருவிழா, வேட்டை திருவிழா, திருக்கல்யாணம், சப்ரத் திருவிழா, தேர்த்திருவிழா.... இவ்வாறு 12 நாட்களும் பூஜை வழிபாடுகள் இடம் பெற்று- தீர்த்தத் திருவிழாவோடு உற்சவம் நிறைவு பெறும்.
கல்முனை மாநகரில் பிரசித்தி பெற்ற சிவன் ஆலயமான இந்த சந்தானேஸ்வரர் ஆலயத்தில் - தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அடியார்கள் வடம் பிடித்து - தேர் இழுத்து கல்முனை மாநகரை வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
Kanapathipillai Kunarasa தகவல் ... See MoreSee Less
1 CommentComment on Facebook
Yathu Meiyalagan ஓமா என்ன உடம்புடா வாப்பா 🦋
தெப்பத் திருவிழா ... See MoreSee Less
0 CommentsComment on Facebook